ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சியில் கிடா வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்
காட்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வன்றந்தங்கள் காலனி பகுதியான ஏரியில் சுமார் பத்து ஆண்டுக்களுக்கு பின் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியது.
ஏரி நிரம்பியதால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியில் கிடா வெட்டி கொண்டாடினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், துணை தலைவர் முத்துலஷ்மி குமார் மற்றும் ரஞ்ஜித், சரவணன், காந்தி, ஈட்லர், குமரேசன், இமான்வேல், ராஜ்போஸ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

No comments
Thank you for your comments