Breaking News

வீட்டை அபகரிக்க அதிமுக பிரமுகர் முயற்சி – தகாத வார்த்தைகளால் மிரட்டல்... இளம்பெண் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள பனப்பாக்கம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நந்தினி (31) என்பவர், கடந்த 31 வருடங்களாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு அமைத்து, மின் இணைப்பு பெற்று குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் பேரவை இணை செயலாளர் ரவி என்பவர், குறித்த இடம் செல்வாக்கு மிக்க அரசு நிலம் என்பதால், அதை அபகரிக்க திட்டமிட்டு, அதே பகுதியில் உள்ள சிலரை வைத்து நந்தினியின் குடும்பத்தினரை வெளியேறச் செய்ய மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், ரவி அடிக்கடி நந்தினியின் வீட்டிற்கு வந்து, தகாத வார்த்தைகள் மூலம் செக்ஸ் டார்ச்சர் செய்து வருவதாகவும், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கே, நந்தினி குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, நந்தினி ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, நந்தினி வீடியோ ஆதாரத்துடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் வந்து, அதிமுக பிரமுகர் ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது மாவட்டத்தில் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments