Breaking News

2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூர்:

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கீழ்ஒரத்தூரைச் சேர்ந்தவ கண்ணன் மகன்  குமரேசன், (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார்.


இந்நிலையில்,  நள்ளிரவில் அவரது வீட்டு முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவிலிருந்த 2 சவரன் நகைகள்,  50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

தொடர்ந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி சாந்தி தனது மகள்   ஜெயப்பிரியா,( வயது 20.) என்பவருடன்  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், ஜெயப்பிரியா அணிந்திருந்த 2 சவரன் தாலிச்செயினை பறித்தனர். அப்போது, ஜெயப்பிரியா கூச்சலிட்டதால், மர்மநபர்கள் தப்பி சென்றனர். 

இது குறித்து புகாரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனர்,  மேலும் சம்பவம் நடைபெற்ற வீட்டை திட்டக்குடி டிஎஸ்பி சிவா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சிறுபாக்கம் எஸ்ஐ, கமல்ஹாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

No comments

Thank you for your comments