நான்கு விவசாயிகள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக்.5-
உத்தரபிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரி என்ற இடத்தில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், விவசாயிகள் கூட்டமைப்புகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஆர் திருநாவுக்கரசு தலைமையில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று, உத்தரபிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகன் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
No comments
Thank you for your comments