தயார் நிலையில் காத்திருக்கும் வாக்கு சாவடிகள்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு நடைபெறும் பூத்துகளுக்கு செல்ல தேவையான அனைத்து பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளன. முதற்கட்டமாக நாளை (06.10.2021) காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை நிறைவு பெற்றது.
இதில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 51127 ஆண், 54705 பெண் மற்றும் 12 இதர வாக்காளர்களும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 50710 ஆண், 54831 பெண் மற்றும் 7 இதர வாக்காளர்களும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50993 ஆண், 53423 பெண் மற்றும் 7 இதர வாக்காளர்களும் என 152830 ஆண், 162959 பெண் மற்றும் 26 இதர வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 196 வாக்குப்பதிவு மையங்கள், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 232 வாக்குப்பதிவு மையங்கள், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 252 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 680 வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
முதற்கட்ட தேர்தலில் 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 நபர்களும், 61 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 நபர்களும், 174 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 591 நபர்களும், 1200 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 3211 நபர்களும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தல் பணிக்காக 5658 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு என மொத்தம் 4 ஓட்டுபோடவேண்டும்.
மேலும் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிலாக வாக்குச் சீட்டுப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ரோஸ் நிறம், மஞ்சள் நிறம், இளம் பச்சை நிறம், வெள்ளை நிறம் என நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
🔥Also Read 👍 ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயார் முதல் முறையாக வெள்ளித் தடியின் மீது தங்க கேடயத்தில் காட்சி
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குபெட்டி, தேர்தல் சுவரொட்டிகள், வேட்பாளர் பெயர்கள், சின்னம் குறித்த போஸ்டர், அலுவலக எழுது பொருட்கள் மற்றும் வாக்குச்சீட்டு என அனைத்தும் தயார் நிலை உள்ளது.
இதேபோல் வாக்குப்பதிவு அன்று வாக்குப் பதிவு செய்ய வரும் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலியில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூத் வாரியாக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலர்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு செல்லும் பொருட்கள் சோதனை மேற்கொண்டு எந்தவித தடங்கலுமின்றி பொருட்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
மண்டலங்கள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ள பொருட்கள் காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்
No comments
Thank you for your comments