காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சர் அவரது மகன் கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளான் சட்டங்களை கண்டித்து அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் அறவழியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வாகனம் மூலம் கண்மூடித்தனமாக மோதவிட்டு பல விவசாயிகள் உயிரிழக்க காரணம் ஆகிய மத்திய அமைச்சர் மற்றும் அவரத மகன் அவரது சகாக்களை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் இச்சம்பவத்துக்கு நீதி கேட்க சென்ற சகோதரி பிரியங்கா காந்தி அவர்களை அராஜக வழியில் தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டுக்காவலில் வைத்த ஒன்றிய அரசின் செயலை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் தலைமையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்
Also Read 👍 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் பெரியசாமி, ராஜீவ்காந்தி, சுபம்.மணிகண்டன், தங்கதுரை, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி வட்டார, நகர பேரூர் தலைவர்களும் நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் துணை அமைப்பு நிர்வாகிகளும் அனைத்து தேசிய தோழர்களும் பங்கேற்றனர்
No comments
Thank you for your comments