மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக்.5-
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற ஊருக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவும் மாநில துணை முதல்வர் மவுரியவும் சென்று இருந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே உள்துறை இணை அமைச்சர் விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியதை கண்டித்து லக்கிம்பூர் கேரி செல்ல இருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் திரண்டு இருந்தனர். அந்த விவசாயிகள் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் அஜிஸ் மிஸ்ரா தேனி அங்கு கார்களில் வந்து விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் மூன்று விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு விவசாயி இறந்துள்ளார். இந்த சம்பவங்களை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பல்வேறு அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
No comments
Thank you for your comments