மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
ஈரோடு, அக்.5-
மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தித்துறை சார்பில் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாகனம் தயார் செயப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
இந்த வாகனமானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. விழிப்புணர்வு வாகனத்தில், வடிகால் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் மழை நீரை எந்த வகைகளில் சேமிக்கலாம் என்பது குறித்த படக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
No comments
Thank you for your comments