Breaking News

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்குமா?

சென்னை :

தமிழகமே ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று திமுக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.


திமுகவின் வாக்குறுதியில் தெரிவித்திருந்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. இப்படி ஒரு வாக்குறுதியை தந்ததுமே அது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. 

Also Read 👍 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், இது நிறைவேற்ற சாத்தியப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது. காரணம், கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது அதிமுக அரசு.. இதுபோக, லாக் டவுன் நேரம்.. அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டதை மறுக்க முடியாது. 

தொற்று குறைந்த நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகியது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இல்லை..அதனால், எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதால், அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது என்றும் நம்பப்பட்டது. 

இதனிடையே, அதிமுக இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி வருகிறது.. இந்த விவகாரம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா"விலும் வெளியானது.. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல், அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று என்பதோ? என்று கேள்வி எழுப்பியிருந்தது...

👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

அதாவது அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குறைவான எண்ணிக்கையில் அர்ச்சகர்களை கொண்டு தங்களின் தேர்தல் வாக்குறுதி மோசடியை வேறுபக்கம் திசை திருப்பும் காரியமே ஆகும் என்று விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சி தலைவர் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும், பொய் வாக்குறுதிகள் என்று திமுகவை இதே விஷயத்தில் சாடியும் வருகிறார்..

எனினும், ஆட்சி இன்னும் 5 வருடங்கள் உள்ள நிலையில், அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.. 

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடாபுரம், குருவன்மேடு, ஆப்பூர், ரெட்டிப்பாளையம், ஆத்தூர் வேம்பாக்கம் பகுதிகளில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, "பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படவில்லையே என்று கேட்கின்றனர்... கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். அதனால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்க முடியவில்லை... ஒருமாதத்துக்கோ, அல்லது 2 மாதங்களுக்கோ என்றால் உடனே வழங்கிவிடலாம்... ஆனால் காலத்துக்கும் வழங்கக்கூடிய திட்டம் இது. அதனால் இதனை செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. எனவே, இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்" என்றார்.

No comments

Thank you for your comments