Breaking News

48 ரயில்கள் நேரம் மாற்றம்

சென்னை, அக்.5-

தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை 4-வது கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் 48 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணைப்படி நேற்று முதல் ரயில்கள் இயக்கப்பட்டன. 

நேரம் மாற்றப்பட்ட முக்கிய ரயில்களின் விவரம் வருமாறு:

அவுரா-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரயில் (02665) நாகர்கோவிலை காலை 9.25 மணிக்கு அடையும். இந்த ரயில் கன்னியாகுமரியை காலை 10.05 மணிக்கு சென்றடையும்.

மும்பை சி.எஸ்.எம்.பி.- நாகர்கோவில் சிறப்பு ரயில் (06351) வள்ளியூர் ரயில் நிலையத்துக்கு காலை 6.04 மணிக்கு வந்து சேரும். கன்னியாகுமரி- கே.எஸ்.ஆர். பெங்களூர் விரைவு ரயில் (06525) குழித்துறை ரயில் நிலையத்தை காலை 11.04 மணிக்கு அடையும்.

மறுமார்க்கமாக பெங்களூர் கே.எஸ்.ஆர்- கன்னியாகுமரி ரயில் (06526) குழித்துறை ரயில் நிலையத்தை மதியம் 1.44 மணிக்கும், இரணியல் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.14 மணிக்கும், நாகர்கோவில் சந்திப்பை பிற்பகல் 3.10 மணிக்கும் அடையும்.

பாவ்நகர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (09572) நாகர்கோவில் டவுனை இரவு 7.38 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் வள்ளியூரை இரவு 8.19 மணிக்கு சென்றடையும். மதுரை-பிகானீர் அதிவிரைவு ரயில் (06053) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.

மதுரை-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (02638) தாம்பரம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.08 மணிக்கு வந்து சேரும். சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (06203) சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அரக்கோணம் சந்திப்பை மாலை 5.38 மணிக்கும், திருத்தணி ரயில் நிலையத்தை 5.58 மணிக்கும் அடையும்.

புதுச்சேரி-எழும்பூர் சிறப்பு ரயில் (06116) காலை 8.08 மணிக்கு வந்தடையும். இது தவிர நிஜாமுதீன்-கன்னியாகுமரி, நாகர்கோவில்-சாலிமார், திருநெல்வேலி- காந்தி தாம் உள்ளிட்ட ரயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான ரயில்களின் நேரம் மாற்றம் நேற்று முதலும், சில ரயில்களின் நேரம் மாற்றம் 6, 7, 8ம் தேதி முதலும் அமல்படுத்தப்பட உள்ளது.

No comments

Thank you for your comments