டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் படுகொலை மற்றொரு விற்பனையாளருக்கு கத்தி குத்து
காஞ்சிபுரம்
ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் ஒன்றில் வியாபாரம் முடித்தபிறகு கடையை மூடி அதன் விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் வரும் பொழுது டாஸ்மாக் கடை வாசலிலேயே மர்ம நபர்கள் துளசிதாஸை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராம் என்பவரையும் கத்தியால் குத்தி உள்ளனர். படுகாயமடைந்த ராம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டாம் கட்டமாக நடைபெறக்கூடிய தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஒன்றியங்களில் டாஸ்மாக் வழக்கம்போல் இயங்கி வந்தன.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் ஒன்று இயங்கி வந்துள்ளது நேற்று வியாபாரம் முடித்தபிறகு கடையை மூடி அதன் விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் வரும் பொழுது டாஸ்மாக் கடை வாசலிலேயே மர்ம நபர்கள் துளசிதாஸை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராம் என்பவரையும் கத்தியால் குத்தி உள்ளனர்.
படுகாயமடைந்த ராம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Also Read 👍நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?
பணம் அல்லது மதுவிற்காக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர், கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு காவல் ஆய்வாளருக்கு தடயங்களை சேகரிப்பது குறித்த அறிவுரை வழங்கினார். மேலும், எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகரை தொடர்புகொண்டு கேட்டபொழுது
டாஸ்மாக் விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கொலைக்கு முன் விரோதம் எதுவும் காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.. பிறகு எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணையின் முன்னேற்றத்தில் தான் கூற முடியும் என தெரிவித்தார்.
டாஸ்மாக் விற்பனையாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments