Breaking News

காவலர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

 தருமபுரி :

காவலர் தினத்தை முன்னிட்டு, காரிமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தெரிவிக்க பயன்படுத்தப்படும் 181 உதவி எண், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பயன்படுத்தப்படும் 1098 ஹெல்ப்லைன் எண், மேலும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் 1930 அவசர எண் ஆகியவை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

அதேபோல், காவல் நிலையம் சுற்றிப்பார்த்த மாணவர்களுக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு ஆகியவை விளக்கப்பட்டு, சமூக பொறுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

No comments

Thank you for your comments