Breaking News

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காத்திருப்பு போராட்டம்




விருத்தாசலம் : 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோ. பொன்னோ, கோ. ஆதனூர், சேப்ளாநத்தம் (வடக்கு), உய்யகொண்டராவி, ஊ. மங்கலம், முதனை, இருக்குறிச்சி, பெருந்துறை உள்ளிட்ட கிராம மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர் அரவிந்தன் அலட்சியத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டத்தை ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையேற்றார்.


சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து துணை வட்டாட்சியர் அன்புராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

ꦾ செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)

No comments

Thank you for your comments