Breaking News

இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் பி.வி. கரியமால் (96) காலமானார்


 தருமபுரி :

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பாப்பிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் அய்யா பி.வி. கரியமால் (96) அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.

1929 ஜனவரி 1ஆம் தேதி பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரின் கொள்கைகளை தனது வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கார் சிந்தனைகளை பரப்ப பணியாற்றியவர்.

தனது சொத்துக்களை சமூகப் பணிக்காக அர்ப்பணித்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கும், இரட்டை டம் குவளை முறைக்கும், பஞ்சமி நிலம் மீட்பு போராட்டங்களுக்கும், கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைச் செயல்களுக்கும் எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டார்.

1959ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மண்டல தலைவராகப் பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து மாநிலத் தலைவராக பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் எழுப்பியவர். 96 வயதான நிலையிலும், மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்து வந்தார்.


கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான பாப்பிசெட்டிப்பட்டியில் வைக்கப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கத்தினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு நாளை மாலை நடைபெறுகிறது என்று கருமலை, இந்திய குடியரசு கட்சி தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களின் இரங்கல்


“அய்யா கரியமால் அவர்கள் அம்பேத்கார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்ற முன்னோடி. விசிக சார்பில் அவருக்கு  அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டது. அவரின் மறைவு பேரிழப்பு” என்றார்.


“பட்டியலின மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட தலைவர்களில் பி.வி. கரியமால் குறிப்பிடத்தக்கவர். வன்னிய மக்களுக்கும் பட்டியலினத்தவருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் கடுமையாக உழைத்தார். 1991 மற்றும் 1996ஆம் ஆண்டு பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டவர். அவரின் மறைவு பேரிழப்பாகும்.”

No comments

Thank you for your comments