Breaking News

மாணவர்களிடம் கை, கால் அழுத்தவைத்த தலைமை ஆசிரியர் – வைரல் வீடியோ சர்ச்சை, தற்காலிக இடமாற்றம்

 தருமபுரி :

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கலைவாணிக்கு பள்ளி மாணவர்கள் கை, கால்களை அழுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களை அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்யப்ரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!


பெற்றோர்கள், “தலைமை ஆசிரியர் அடிக்கடி குழந்தைகளைக் கையால், காலால் அழுத்த சொல்லி மிரட்டுவார். பெற்றோரிடம் சொல்லக்கூடாது எனவும் கட்டாயப்படுத்துவார். அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் கலைவாணி மீது தற்காலிக பணியிட மாற்ற உத்தரவு பிறப்பித்தனர். 

ஆனால் சமூக ஆர்வலர்கள், கல்வி ஆர்வலர்கள், “இது கண் துடைப்புச் செயல். இடமாற்றம் அல்ல, பணி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாக பணி நீக்கம் செய்யவில்லை” என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments