தேசிய வேளாண் அறிவியல் அகாடமியில் (FNASS) புதிய உறுப்பினராக பேராசிரியர் செந்தில் நடேசன் தேர்வு
கோவை:
தேசிய வேளாண் அறிவியல் அகாடமியில் (FNASS) புதிய உறுப்பினராக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் செந்தில் நடேசன், தேசிய வேளாண்மை அறிவியல் அகாடமியில் (கலைக்கூடம்) உறுப்பினராக இணைத்து கௌரவப் படுத்தியுள்ளது.
இந்த கெளரவம் 1990 ஆம் ஆண்டு முதன்முதலில் முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் வழங்கப்பட்டது. அதன் பிறகு இதுவரை நான்கு பேராசிரியர்கள் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.
பேராசிரியர் செந்தில் நடேசன் 250 மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் புதிய வெப்பமண்டல கோதுமை இரகங்கள், சிறுதானிய உயர் இரகங்கள் வெளியிட்டு சிறுதானிய பரவலுக்கு காரணமாக இருந்துள்ளார்.
இவரது, தாவரங்களில் மணிகள் உதிர்வதற்கு காரணமான மூலக்கூறு கண்டுபிடிப்பு "செல்" என்ற ஆராய்ச்சி இதழில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு "சிறந்த வேளாண்மை விஞ்ஞானி" விருதை வழங்கியது.
இவர் புத்தாக்க மையத்தின் இயக்குனராகவும், மதுரை வேளாண் கல்லூரியில் உயிர்த் தொழில் நுட்பத் துறையை உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகித்துள்ளார்.
தற்போது தாவர மூலக்கூறு பிரிவில் உயிர்த் தொழில் நுட்ப மையத்தில் பேராசிரியராக இருக்கும் இவர் அதிக வைட்டமின் 'ஏ' சத்து கொண்ட மக்காச் சோள இரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
No comments
Thank you for your comments