உலக மக்கள் நன்மை வேண்டி காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் மகா சுதர்சன ஹோமம்
காஞ்சிபுரம்
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளதை ஓட்டி உலக மக்கள் நன்மை வேண்டி காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளதை ஓட்டி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில், உலக மக்களின் நன்மை வேண்டியும், கொரோனா, ஓமைக்ரான், நோய்தொற்று பயம் நீங்க வேண்டியும், கல்வி,செல்வம், உள்ளிட்டவை பெற்று உலக மக்கள் நன்மையுடன் வாழவேண்டி காஞ்சிபுரம் பில்லாபாங் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் மகா சுதர்சன யாகம் நடைபெற்றது.
மகா சுதர்சன யாகத்தை ஒட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, யாக குண்டம் அமைக்கப்பட்டு சுதர்சன ஹோமம், நரசிம்மர் ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம்,லட்சுமி குபேரர் ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் அடங்கிய மகா சுதர்சன ஹோமம், கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, 108 வகையான ஹோம திரவியங்கள், மலர்கள், பட்டு வஸ்திரம், பழங்கள், உள்ளிட்டவை யாககுண்ட தீயில் இட்டு ஹோமம் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி நடைபெற்ற மகா சுதர்சன ஹோமத்தில் புத்தாண்டு பிறந்ததை ஓட்டி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் சுதர்சன ஹோமத்தில் கலந்துகொண்டு சக்கரத்தாழ்வார் சுவாமியை தரிசித்து வணங்கி விட்டு பிரசாதங்களை பெற்று சென்றனர்.
No comments
Thank you for your comments