உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்கள்
கோவை:
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேட்டி சேலை, உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது..
கோவை செல்வபுரம் சிஜிவி நகர் பகுதியில் உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகளை உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை தலைவர் நாகூர் மீரான் தலைமையில், பகுதி செயலாளர் கேபிள் மணி 79வது வார்டு பொறுப்பாளர் பழனிசாமி முன்னிலையிலும் முதியோர் மற்றும் ஏழை எளிய 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேட்டி சேலை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கே.ஆர் பழனிச்சாமி, தில்லைநகர் கழக நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments