Breaking News

மாநகராட்சி அலட்சியத்தால் பெண் பலி... தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வலுக்கும் கோரிக்கை

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்கள் தர வேண்டி பல ஆண்டுகளாக ஆணையரிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தற்போது புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் சரஸ்வதி இடமும் பலமுறை முறையிட்டுனர்.

இந்நிலையில், உபகரணங்கள் வழங்காததால் தற்போது சுகாதார தூய்மை பணியாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனும் தங்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லாமல் வேலை செய்து வருவது மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


வெண்ணிலா (வயது 48) என்பவர்  மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர்,  31.12.2021 (வெள்ளிக்கிழமை) அன்று ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் தூய்மை பணி செய்தனர். 

இதையடுத்து  சோழம்பேட்டை பகுதியில் கழிவுகளை கொட்ட செல்லும் போது கழிவுகளை கொண்டு சென்ற  டிராக்டர் வாகனத்தில் பாதுகாப்பு இன்றி  தவறி விழுந்து, அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் அங்கேயே உயிரிழந்தார்.

இதை கண்ட  வெண்ணிலாவின் உறவினர்கள் மற்றும் ஆவடியில் இவருடன் பணிபுரியும் பெண்கள் கதறி அழுதனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள்   மன வேதனையில் துடித்துனர். 

இறந்த பெண்ணின் இரண்டாவது மகளுக்கு தை மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கேட்ட அப்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி அவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

இதேபோல் தூய்மைப் பணி செய்யும் பணியாளர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் தராமல் இருப்பதும் மனவேதனையில் இருப்பதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சுகாதர அலுவலர்  அப்துல் ஜாபரிடம் (பொறுப்பு) விசாரித்த பொழுது இதற்க்கு நான் மட்டும் பொறுப்பல்ல நிர்வாகமும் தான் காரணம் என்று தெரிவித்தார்.

உடனடியாக  பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் அவர்கள் தலையிட்டு இவருக்கு உண்டான இழப்பீடும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளமும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மாநகராட்சியின் அலட்சியத்தாலும், பாதுகாப்பின்மையாலும்  ஒரு உயிர் பலியாகியுள்ளது.  

தூய்மை பணியாளர்கள் இல்லையென்றால் பொதுமக்களால் வாழவே முடியாது... ஊர் நாற்றமெடுக்கும்.. 

இவர்களின் உண்ணத பணியை உணர்ந்து அலட்சியம் காட்டாமல் மாநகராட்சி நிர்வாகம் இவர்களின் தேவையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும் என்றும் பொதுமக்களிடையே கோரிக்கை வலுத்துவருகின்றது. .. 



No comments

Thank you for your comments