Breaking News

பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச மாநாடு

கோவை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான வளர்ந்து வரும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச மாநாடு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்களும் பி.டெக். ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பயிலும் மாணவர்களும் இணைந்து தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரத்தை கொண்டாடும் வகையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான வளர்ந்து வரும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தனர்.

'நிலையான வாழ்வுக்கான பசுமை ஆற்றல் தொழில்நுட்பம்' என்ற கருப்பொருளுடன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

முனைவர் பி. சுப்பிரமணியன் பேராசிரியர் மற்றும் தலைவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை, வரவேற்புரை ஆற்றினார். 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர், முனைவர் பா. ஸ்ரீதர் இம்மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

மலேசியாவின் கெபங்கசான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முனைவர் கமருசமான் சோபியன் கருவுரை வழங்கினார். கமருசமான் சோமியன் புட்டோவோல்டாயிக் தெர்மல் டெக்னாலஜி (பிவிடி) தொழில்நுட்பத்தில் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்கள்' பற்றி எடுத்துரைத்தார். 

அவர் பல்வேறு பிவிடி அமைப்புகளைப் பற்றி விளக்கினார் மற்றும் அதன் செயல் திறனை பிவி பேனலுடன் ஒப்பிட்டார். அகமதாபாத்தில் உள்ள பிரசின்டோ தொழில்நுட்பத்தின் துணை நிறுவனரான ராம் மேனன் 'மாறிவரும் ஆற்றல் உலகில் வாய்ப்புகள்’ பற்றி பேசினார். நிலையான வளர்ச்சி மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களை நிறுவுவதன் மூலம் அபாயகரமான கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வழியைக் கண்டு பிடிப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். 

குறைந்த செலவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினார்.

கல்லூரியின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர் பொறியாளர். ஸ்ரீ கிருஷ்ணபாலச்சந்திரன், ஐக்கியநாடுகள் வளர்ச்சித் திட்டம், புதுடெல்லி ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். 

பசுமைப் பொறியாளர்களின் நிறுவன திறன்களை வெளிப்படுத்தவும் நிறுவவும் இந்நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமைந்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தருமான முனைவர் அ. சு. கிருட்டிணமூர்த்தி மாநாட்டின் துவக்க உரை நிகழ்த்தி கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். 

மாறிவரும் பருவநிலையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார். அதிகரித்து வரும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் கூறினார். மேலும் வைக்கோல் மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவித்தார்.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் இடையேயான தொடர்புகளை இந்த மாநாடு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. 350க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, வாய்மொழி விளக்கக்காட்சி, வினாடி வினா, மறுப்பு புதிர் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

இறுதியாக முனைவர். கே.நாகராஜன் மணி மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர்  நன்றியுரை ஆற்றினார்.

No comments

Thank you for your comments