நாளை வேலை வாய்ப்பு முகாம்... இளைஞர்கள் பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு...
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை வட்டார அளவில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி படித்த இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) வட்டார அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் வசிப்போர் அதிகளவில் பங்கேற்கும் பொருட்டு, கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் அமைந்துள்ள நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 23.12.2021 அன்று காலை 9.00 முதல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களான ஐடி, இன்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல் கார்மென்ட்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனைத் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதால், 8-வது முதல் தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் தவறாது கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments
Thank you for your comments