பொள்ளாட்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு... திமுகவினர் மீது புகார் மனு அளித்தார் எஸ்.பி. வேலுமணி
கோவை:
கோவை கோதவாடி குளத்தை பார்வையிடச் சென்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வை சொந்தத் தொகுதியில் கடமையை செய்ய விடாமல் செருப்பு வீசி தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல்துறை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆர்.சுதாகரிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ். பி வேலுமணி எம்.எல்.ஏ., புகார் மனு அளித்தார்.
மேலும் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மீதும் எம்.எல்.ஏக்கள் மீதும் திமுக தூண்டுதலின்பேரில் பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
பொய் வழக்கை கண்டித்தும் நியாயம் கேட்டும் ஐஜியிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
உடன் கோவை மாவட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன் பி.ஆர்.ஜி. அருண்குமார் கிணத்துக்கடவு தாமோதரன் மேட்டுப்பாளையம் ஏ. கே செல்வராஜ், சூலூர் கந்தசாமி,கே .ஆர் ஜெயராமன் கோவை மாவட்ட வக்கீல் அணி பிரிவு மற்றும் அனைத்துகழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments