Breaking News

டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தருமபுரி :

திசம்பர் 6  தலித் - இசுலாமியர் எழுச்சி நாள் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வீரவணக்க நாள்  எழுச்சி தமிழர் முனைவர். தொல்.திருமாவளவன் அவர்கள்,  பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்நாளை தலித் - இசுலாமியர் எழுச்சி நாள் என்று நம்மை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் என்பது தலித் சமுதாய மக்களுக்கு துக்க தினம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்நாள் இசுலாமிய சமுதாய மக்களுக்கு துக்க தினம். 

ஆனால், எழுச்சி தமிழர், இளம் புரட்சியாளர் திருமாவளவன் அவர்கள்,  இந்நாளை துக்க நாளாக கருதி துவண்டு விடாமல்,  எழுச்சி நாளாக மாற்றியது தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன் அவர்களின் மாற்று சிந்தனை ஆகும்.

ஆர்.எஸ்.எஸ். வினர் திட்டமிட்டு, பாபர் மசூதியை இடித்தால், அன்று இசுலாமியர்கள் இந்நாளை கருப்பு தினமாக அனுசரிப்பார்கள்

அதே வேலையில், இந்திய சட்ட சிற்பி அம்பேத்கர் நினைவு நாளை தலித் சமுதாய மக்கள் அனுசரித்தால், இரண்டு சமுதாயத்திற்கும் இடையே கலவரம் ஏற்படும் என்பது பா.ஜ.க.வின் திட்டம்.  எனவே தான், திசம்பர் 6 நாளை எழுச்சித் தமிழர் முனைவர் திருமாவளவன் அவர்கள், தலித்- இசுலாமியர் எழுச்சி நாள் என அனுசரிக்கும்படி கூறி, இரண்டு சமுதாயத்திற்கும் இடையே, ஒற்றுமையை உருவாக்கும் வண்ணம் சிந்தித்து, ஆர்.எஸ்.எஸ். பாசிச மதவெறி கும்பலின் எண்ணத்தை முறியடித்த தலைவர் தான் இளம் புரட்சியாளர் திருமாவளவன் ஆவார் என்பதை நாம் உணர வேண்டும். 

திசம்பர் 6 ஆம் நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தில், பா.ஜ.க.வினர் நச்சு எண்ணங்களை வீழ்த்தும் நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கருத்தியலை, 

ஆழ் மனதில் ஏற்று செயல்படும் நாளாக உறுதி ஏற்போம். என்ற எழுச்சித்தமிழர் அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் வகையில் இன்று தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் கச்சேரி மேடு பகுதியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திசம்பர் 6 ஆம் நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தில், பா.ஜ.க.வினர் நச்சு எண்ணங்களை வீழ்த்தும் நாளாகவும், புரட்சியாளர்  அவர்களின் கருத்தியலை, ஆழ் மனதில் ஏற்று செயல்படும் நாளாக உறுதி ஏற்போம் என்ற புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்  கொள்கையைப் பின்பற்றும்  வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம்  சார்பில் பத்மா மாரியப்பன் கல்லூரி மாணவ மாணவிகள்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலித்சேட்டு ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன் ராமச்சந்திரன்,தீத்து செல்லைசக்தி  நகர செயலாளர் சித்தார்த்தன் தொழிலாளர் விடுதலை முன்னணி டாஸ்மாக் சார்பில் மாநில துணைசெயலாளர் ஆறுமுகம் முருகன் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் பாஷா காதர் இந்திய குடியரசு கட்சிகள் சார்பில் வைகுந்தவாசன்  வெங்கடேசன் குமரேசன் ராஜேந்திரன் திமுக சார்பில் சூரியாதனபால் முல்லைரவி ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கோவி.சிற்றரசு சுபாஷ்  கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தோழர்மல்லிகா முருகன் தமிழ்குமரன் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ரவிச்சந்திரன் சிவகுமார் கோபி கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

No comments

Thank you for your comments