அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அவரது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் திமுக விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அந்தவகையில் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன். சங்கரலிங்கம். பரமசிவம். பில்டிங் குப்புசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் வணிதா, தாரண், பூக்கடை மணிகண்டன், நகர தலைவர் நாதன், அன்பு, மாவட்ட பொது செயலாளர் காஞ்சி காமராஜ், மாவட்ட செயலாளர் ஆட்டோ ரவி, கந்தசாமி, கலீல்பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதேபோல் முன்னாள் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர்.ஜீ.வி. மதியழகன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் நகர தலைவர் இராமநீராளன், பிரபு, லையன் குப்புசாமி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பாசறை செல்வராஜ், ஸ்டான்லி, டேவிட், திமுக, மதிமுக, மாவட்ட செயலாளர் வளையாபதி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், சங்கர் கணபதி, சரவணன், மற்றும் மக்கள் தேசம் கட்சி மற்றும் பறையர் பேரவை மாணவரணி சார்பில் மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமையில் மலர் மாலை அணிவித்தும் அம்பேத்கர் கையில் நோட்டீஸ் வழங்கியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ரவி, சத்யா, பாலாஜி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments