Breaking News

கோவையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் சிங்காநல்லூர் சாலையில் ரூ.4.4கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி  தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கென தனி கவனம் செலுத்தி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில்,  போத்தனூர் சிங்காநல்லூர் சாலையில் ரூ.4.4கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 12.90 மீ அகலம் மற்றும் 53.80 மீ நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. 

இப்பாலப்பணிகள் நிறைவடையும்போது வெள்ளலூர், சிங்காநல்லூர், போத்தனூர், சூலூர், பட்டணம்புதூார், இடையர்பாளையம், கஞ்சிக்கோணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும், வெள்ளலூர் பேரூராட்சயில் ஆலயம் அவென்யூ மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் ரூ.49.10 இலட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தடுப்புச் சுவர்

கட்டும் பணி, செட்டிபாளையம் பேரூராட்சியில் ராயல் அவென்யூ பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.39கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி  பணிகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர்(நபார்டு கிராம சாலைகள்) சோமசுந்தரமுருகன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் துவாரநாத்சிங், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்த கொண்டனர்.

No comments

Thank you for your comments