சோஷியல் சர்வீஸ் 2025 தொலைநோக்கு திட்டம் அறிமுகம்
கோவை:
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பாக வருகின்ற பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள எட்டாம் ஆண்டு விழா மற்றும் ஐம்பத்தொரு கலச பூஜை சம்பந்தமாக நிலவேம்பு சித்தர் விஸ்வபிரம்ம ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சோஷியல் சர்வீஸ் 2025 என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவமனை இலவச பள்ளிக்கூடம் முதியோர் இல்லம் அமைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டது.
விழாவில்குரு மாதாஜி சரஸ்வதி, பாக்கியலட்சுமி, செயலாளர் கணேஷ்குமார், அட்வகேட் சுந்தர்ராஜ், நாச்சிமுத்து கேபி முருகன், மலேசியா கண்ணன், திருக்குமார், பிரசன்னா, மகளிரணி உமாமகேஸ்வரி, வாசுகி தங்கமணி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments