Breaking News

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் கூட்டம்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்ட  ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் கோவை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன்  தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  எஸ்.நடராஜன்   தெரிவித்ததாவது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற உன்னத நோக்கோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

மாறிவரும் உலக வாத்தக சூழலுக்கேற்ப உழவர்களை தயார்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானதாகும்.

உழவர்கள் நவீன வேளாண் வணிகத்தில் ஈடுபட்டு அதிக லாபம் அடைய வேண்டும் என்ற உயரிய இலக்கோடு, விவசாயிகளின் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதிலும், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு விவசாயிகளை சந்தை சார்ந்த வேளாண்மைக்கு ஊக்கப்படுத்த வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாக்கிற்கு இனங்க வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு தமிழகமெங்கும் வேளாண் சந்தைபடுத்துவதில் விவசாயிகளை நேரிடையாக தொடர்புபடுத்தி அவர்களின் பொருளாதரத்தை மேம்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தல் 21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. வேளாண் வணிக துறையின் சிறப்பு திட்டமான காய்கறி, பழங்கள் மற்றும் அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் 7 முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மையங்களை சிறுவாணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஆனைமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், விநாயக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நன்முறையில் செயல்படுத்தி வருகின்றனர். 

மேலும் சங்கமம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. என வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர்  எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments