பாதாள சாக்கடை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் நேரில் ஆய்வு..
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் பகுதி-4 மற்றும் II பணிகளை நகராட்சி நிர்வாகஇயக்குநர் பா.பொன்னையா இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் பகுதி- மற்றும் பணிகள் வார்டு எண்-87 முதல் 100வது வார்டு வரை உள்ள 14 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது அற்புதம் நகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்பந்த காலத்திற்குள் கொண்டு வர வேண்டுமென பொறியாளர்களை கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ரூ.168 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், வெள்ளலூரில் பயோமைனிங் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தேங்கியுள்ள பழைய குப்பைகளை 68 ஏக்கர் நிலத்தை திட்டகாலத்திற்குள் மீட்டெடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து மக்கா குப்பைகளை தேவைப்படும் சிமென்ட் நிறுவனங்கள் மற்றும் இதர பயன்பாட்டிற்கு துரிதமாக வழங்கிடவும்.
இதர மக்கா குப்பைகளை வெள்ளலூரிலிருந்து முழுமையாக அகற்றிட தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த வளர்ச்சித் திட்டங்கள், சீர்மிகு நகர திட்டப்பணிகள், குடிநீர் பணிகள், பாதாளசாக்கடை திட்டப்பணிகள், கணினி மூலம் வருவாய் ஈட்டும் திட்டப்பணிகள், தார்சாலை மற்றும் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து கேட்டறிந்து, மாநகராட்சியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அறிவுறுத்தினார்.
இவ்ஆய்வின்போது துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, உதவி ஆணையர் அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏ.செந்தில்குமார், நிர்வாக பொறியாளர் ஜே.கே.அண்ணாதுரை, மாநகராட்சி நிர்வாக பொறியாளர்கள் உமா, சசிப்பிரியா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பீமராஜன், எல்&டி திட்ட அலுவலர் ராஜா சுரேஷ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜன், கருப்பசாமி,ஹேமலதா மற்றும் உதவி பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments