Breaking News

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளில் வார்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக, வளர்ச்சி முகமை கூட்டரங்கில் கோவை சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளில் வார்டு மறுவரையறை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், ஆகியோர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் தலைவர் முனைவர் வெ.பழனிகுமார், இ.ஆ.ப.,(ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் திருமதி.எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., மறுவரையறை ஆணைய உறுப்பினர்/ நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர்கள் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,(கோவை, செ.கார்மேகம், இ.ஆ.ப., (சேலம்), டாக்டர்.எஸ்.வினீத், இ.ஆ.ப., (திருப்பூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரைறை ஆணையத்தின் தலைவர் அவர்கள் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை ஆகியவையும், திருப்பூர் மாவட்டத்தில், திருமுருகன்பூண்டி, சேலம் மாவட்டத்தில் தாராமங்கலம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு மறுவரையறை முன்மொழிகள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வார்டு மறுவரையறை செய்வதற்கு தமிழ்நாடு மறுவரையறை சட்டத்தில் 13 சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. தமிழ்நாடுஅரசின் வழிகாட்டு நெறிமுறை கள் 15 விதிகள் உள்ளன. அதனடிப்படையில்  வார்டு மறுவரையறை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வார்டுக்கும் தெளிவான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும். முதலாவதாக இயற்கையான எல்லைகள், புதியதாக ஏற்படுத்தப்படும் எல்லைகளையும் வைத்து வரையறை செய்யலாம். மேலும் புவியியல் ரீதியாகவும், தொடர்ச்சியாகவும் எல்லைகளையும் வைத்து வரையறை செய்யலாம்.

மக்கள் தொகையினை அடிப்படையாக கொண்டு வார்டு வரையறை செய்யும்போது, உள்ளாட்சி வார்டுகளில் மக்கள் தொகையில் சராசரியிலிருந்து 10 விழுக்காடு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு எல்லைகள் எங்கிருந்து தொடங்கவேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பது குறித்து விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வார்டுகளுக்கு எண்களில் பெயரிடவேண்டும். மக்களின் கருத்துகளை பதிவு செய்து அக்கருத்துக்களை ஏற்கவும் நிராகரிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் கேட்கப்பட்டது. மேலும், கோரிக்கை மனுக்க பெறப்பட்டுள்ளது. 

இவைகள் அனைத்தும், முறையாக பரீசிலனை செய்யப்பட்டு, சட்டவிதிக்களுக்குட்பட்டு, வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு மறுவரையறை என ஆணையத்தின் தலைவர் முனைவர் வெ.பழனிகுமார், இ.ஆ.ப.,(ஓய்வு) தெரிவித்தார்.


No comments

Thank you for your comments