கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
கோவை:
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு சூலூர் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பள்ளபாளையம் சாலை அருகே சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை உதவி ஆய்வாளர் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்கள்.
சந்தேகத்தின் அடிப்படையில் கையில் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுசர ராஜன்ஸ் என்பவரது மகன் ஜெடாதீப்ராஜன்ஸ் (வயது-24) மற்றும் ஸ்ரீமாட்டரியா என்பவரது மகன் சுசில் டரியா(வயது-25) என தெரியவந்தது. எனவே அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார்.
No comments
Thank you for your comments