Breaking News

மொரப்பூரில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்

 தருமபுரி

மொரப்பூரில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசுகையில், திமுகவினரையும்  தமிழக முதல்வரையும் கொச்சைப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, அங்கிருந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,   நாம் தமிழர் கட்சியினரின் நடத்திய ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மொரப்பூர் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Thank you for your comments