அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், அதி நவீன மருத்துவ உபகாரணங்கள் மற்றும் உயிர்காக்கும் உயர்தர சிகிச்சைகள் அளிக்கும் வகையிலும், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு சிகிச்சை பிரிவு, புறநோயாளி சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஆக்ஸிஜன் வசதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவரும், சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பிறந்த பச்சளம் குழந்தைகளின் நலன் குறித்து தாய்மார்களிடம் கேட்டறிந்தார்.
No comments
Thank you for your comments