காய் கனிகள் சந்தையில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மையால் சுகாதார சீர்கேடு
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி கனகமூலம் காய் கனிகள் சந்தையில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை ஙண் உரம் செயலாக்க மையம், உணவு பொருளான காய் கனிகள் விற்கும் சந்தையில், அக்கம்பக்கத்தில் உள்ள கழிவுகளையும் கொண்டுவந்து கொட்டுவதால் காய் கனிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டை உருவாக்க வாய்ப்புள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தி மக்களுக்கு சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டிய மாநகராட்சியே, உணவு பொருட்கள் விற்கும் இடத்தில் இப்படி கழிவுகளை கொட்டும் போது அதில் இருந்து கண்ணுக்கு தெரியாத கிருமிகள் காய் கனிகளில் பரவி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு உருவாக காரணமாகிவிடாதா ?
இதை ஏன் உணரவில்லை மாநகராட்சி நிர்வாகம்? இப்படி குப்பைகளை கொட்டி இந்த பகுதியை சிறிது சிறிதாக வலம்புரிவிளை குப்பை கிடங்கை போல் மாற்ற முயற்சிக்கிறதோ மாநகராட்சி என்ற சந்தேகம் எழுகிறது.
ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் குப்பைகளை காய் கனி சந்தையில் கொட்டுவதை உடனே தடை செய்து அந்த பகுதியை தூய்மை படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
No comments
Thank you for your comments