Breaking News

புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் கைது.

கோவை :

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் கைது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப. உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் அரசால்  தடை  செய்யப்பட்ட  கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும்     மேற்படி புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக கோவை மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர்  முத்துக்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்த செட்டிபாளையத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் லட்சுமணன் வயது 36 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 13.365  கிலோகிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம்-1 கைப்பற்றப்பட்டது, மேலும்

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  உதவி ஆய்வாளர்   ஜெகநாதன்  தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது துடியலூர் ராக்கி பாளையத்தில் உள்ள  மளிகை கடையில் சோதனை செய்து சுமார் 8 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த தர்மராஜ் வயது 58 என்பவரை கைது செய்து மேற்படி  இரண்டு நபர்களிடம் இருந்தும் மொத்தம்  சுமார் 21.365 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம்-1  பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்  தெரிவித்தார்.

No comments

Thank you for your comments