நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
கோயம்புத்தூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, பகுதி கழக - ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மற்றும் வட்டக் கழக - பேரூர் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தலைமையில் சரவணம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கழகத்தினர் செய்திட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, பங்கேற்ற அனைவருக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் மாவட்ட கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர்.
மேலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலை பகுதி கழகப் பொறுப்பாளர்களிடம் அவர் வழங்கினார்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக அண்மையில் குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த நாட்டில் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட விபத்தில் உயிரிழந்த அனைவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments
Thank you for your comments