Breaking News

வேளாண் பூச்சிகொல்லி மருந்துகளை கையாளும் முறைகள் பயிற்சி

கோவை 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அலாந்துறை பகுதி நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் பயிர் பாதுகாப்புக்கான பூச்சிகொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளும் முறைகள் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. 



பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர்,- மத்திய திட்டம் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர், தொண்டாமுத்தூர் ஷீலா புசலட்சுமி  விவசாய பெருமக்களை வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குநர்- ஓய்வு மோகன்ராஜ் சாமுவேல்  பூச்சிகொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான விரிவான தொழில்நுட்பவுரை வழங்கினார்.  

வேளாண்மை அலுவலர் முகம்மது தாரிக் திட்ட விளக்கவுரை, மக்கா சோளம் படை புழு மேலாண்மை, தென்னை வெள்ளை ஈ மேலாண்மை,  தென்னையில் நுண்ணூட்டம் இடுதல், பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை விநியோகம் செய்யப்பட்டது. பயிற்சியை அலந்துறை பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பால்பாண்டி, அட்மா திட்ட மேலாளர்கள் ராஜேஷ் மற்றும் நந்தினி ஏற்பாடு செய்தனர்.

No comments

Thank you for your comments