Breaking News

ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

கோவை:

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி ரமேஷ் என்பவரை கொலை செய்த, கொலை வழக்கில் குற்றவாளிகளான  போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த  ரகுகிருஷ்ணன்  என்ற குள்ளி ரகுபதி (20) என்பவரை கைது செய்தனர்.

இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில்  மாவட்ட ஆட்சியர்  சமீரன்   ரகு கிருஷ்ணனை  குண்டர் தடுப்புச் சட்டத்தின்  நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். 

மேற்படி உத்தரவின் படி கொலை வழக்கு குற்றவாளியான ரகு கிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments

Thank you for your comments