Breaking News

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு .... குமரி மாவட்ட காவல்துறையினர்

கன்னியாகுமரி

நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ.பத்ரிநாராயணன் IPS உத்தரவிட்டிருந்தார். 

உத்தரவின் பேரில்  06.12.2021 அன்று இந்து கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஈஸ்வரன், சைபர் கிரைம் ஆய்வாளர் திரு. வில்லியம் பெஞ்சமின் மற்றும் கோட்டார் காவல் ஆய்வாளர் திரு.கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர்  இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  இணையவழி குற்றங்கள் நடந்தால் புகார் அளிக்க வேண்டிய https://cybercrime.gov.in/  லிங்கு  குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் மூலமாக பணத்தை இழக்க நேரிட்டால்  155260  என்ற எண்ணிற்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும், மேலும் ஆன்லைன் மூலமாக அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருகிறோம் என்று வரும் விளம்பரங்களை நம்பி  ஏமாந்து விடக்கூடாது என்று கூறி மாணவ,  மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

No comments

Thank you for your comments