Breaking News

நூல்கள் சிந்தனை... திரும்பி பார் திருப்பூர் குமரன்

நூலின் பெயர்: திரும்பி பார் திருப்பூர் குமரன்

நூலாசிரியர் : ஆழ்வை எஸ்.கண்ணன்

நூல் வகை : வரலாற்று நாடகம்

மொத்த பக்கங்கள் : 104 

விலை : ரூ.120.00 

வெளியீடு : திருப்பூர் முத்ததமிழ்ச் சங்கம்

தொ.எண் : 75503 16500

நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திருப்பூர் குமரன் வளர்ப்பு மகன்கள்.. தியாகிகள்.. எழுத்தாளர்கள்.. கவிஞர்கள் மற்றும் ஆசிரியரின் நுழைவாயில் அருமை. திருப்பூர் குமரன் வாழ்க்கை குறிப்பில்.. வழி.. அகிம்சை என்றும் திருக்குறள் திருவாசகம் தேவாரம் பாடல்களை நெசவு செய்து கொண்டே பாடுவது இலக்கியம்..இறைப்பற்றின் அவருக்கு உள்ள ஆர்வத்தை காட்டுகிறது.

வாழ்ந்த நாட்கள் 28 ஆண்டுகள் மட்டுமே. குறுகிய வயதில் மலையளவு சாதனை. திருப்பூர் குமரன் அவரது துணைவியார்   இராமாயி அம்மாள்... நினைவு சிலைகள் ..ஆசிரியரின் நாடகங்கள் குறிப்பாக 19.3.1925 இல் அண்ணல் காந்தி அடிகள் உடன் திருப்பூர் குமரன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அநேக புகைப்படங்கள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது மிக சிறப்பு.திருப்பூர் குமரனின் தந்தைக்கு நெசவு தொழில். ஏழ குழந்தைகள்... குடும்பத்தில் மிகவும் வறுமை.. கோயில் கோயிலாக பிரசாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு கோயிலிலே படிப்பது அவரின் உள் ஆர்வத்தை  காட்டுகிறது.

கல்லு கடை மூடும் போராட்டத்தில் முகம் முழுவதும் தீப்புண்கள். நாட்டிற்கு கிடைத்த அன்பு பரிசு. என் உடல் நோய்வாய்பட்டு இருக்கலாம் என் உள்ளம் வலிமையாக தான் இருக்கிறது.. அன்றைய ஆங்கிலேய எஜமானர்களின் கைக்கூலியான போலீஸ் பட்டாளம் குமாரசாமியின் மண்டையை தடியால் பிளந்து ரத்தம் பீரிட்டு வருவதையும்... பூட்ஸ் காலால் உதைத்தும் ...அடிக்க...அடி.. தேசத்தின் கொடியை காக்க.... சுதந்திரத்தின் உணர்வு தலை நிமிர்ந்து நிற்கிறது...கொடி காத்த திருப்பூர் குமரனின் உயிர் மட்டும் குறுதி வெள்ளத்தில் மயங்கி ... உருக்குலைந்து... மண்ணில் மயங்கி விழுவதும்.. மருத்துவ பரிசோதனையில் கிட்டத்தட்ட 19 எலும்புகள் உடைந்து இருப்பதும்... .மயக்கம் .உணர்ச்சி. உயிர் வேதனையில் மயங்கி கிடக்கும் நிலை. 

தாயாருக்கு செய்தி ஒரு மைல் தூரத்தை 5 நிமிடங்களில் ஓடி வர துடிப்பது தாய்ப்பாசம் திருப்பூர் குமரன் மரணம்.கண்களில்  ஒவ்வொன்றைப் படிக்கும்போதும் கண்களில் கண்ணீர் வர செய்கின்றது.நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரன் அடக்கம் செய்த இடம் பலருக்கும் தெரியாத இடமாகவும்.. செய்தியாகவும் தான் உள்ளது. 

அது ஏன் ?.ஆசிரியரின் கேள்வி உண்மைதான்.ஆழ்வை கண்ணன் அவர்கள் திருப்பூரில் சுமார் 24 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக... கவிஞராக.. எழுத்தாளராக... நடகவியலராக வலம் வருகிறார்.

இந் நூலுக்காக எத்தனை படிகள்.... இடங்கள் ஏறி இறங்கி இருப்பார். இந்நூலுக்கான உண்மையான வரலாற்றை இன்றைய மாணவர்களுக்கு மிகத்துல்லியமாக அளிக்க வேண்டும் என்பதில் கடும் சிரமம் எடுத்து இந்நூலை  வெளியிட்டுள்ளார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அத்துடன் ஒவ்வொரு மாணவனின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.  வீரவணக்கம்...!

நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு

வாரம்தோறும் நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி

காலச்சக்கரம் நாளிதழ் 

#54, 3வது குறுக்குத் தெரு, 

டிகேஎம் கல்லூரி பின்புறம்,

கணபதி நகர், வேலூர் - 632002

9360005566

E - Mail : ksm.news2015@gmail.com

 


No comments

Thank you for your comments