Breaking News

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

அரூரை அடுத்த அண்ணாமலைப்பட்டியில் விவசாயிகள் வீட்டில் நகை, பணம் திருட்டு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சென்னையன், வெங்கடேசன், மதுபாலாஜி ஆகியோரது வீட்டில் அண்மையில் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்களை திருடி சென்றுள்ளனர்.

இந்த விவசாயிகள் மூவரின் வீடுகளில் இருந்து மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கம்பைநல்லூர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

No comments

Thank you for your comments