கஞ்சா விற்ற நபர் கைது... கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
கோவை
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நீலாம்பூர் மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம், மாஸ்கோ நகர், சாமுண்டி புறத்தைச் சேர்ந்த சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ரஹீம் (வயது-23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.100 கிலோகிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார்.
No comments
Thank you for your comments