நூல்கள் சிந்தனை - தின்பண்டம் 1934
நூல் பெயர்: தின்பண்டம் 1934
ஆசிரியர் : இராமன் முள்ளிப்பள்ளம்
பதிப்பாளர் : சஞ்சீவியார் பதிப்பகம்
பக்கங்கள்: 48
வகை : சிறுகதை தொகுப்பு
விலை : ரூ.60
தொ.எண் : 95001 72822
அணிந்துரை : அ.ஆனந்தன் ஸ்தாபக பொதுச் செயலாளர், மிக அருமையான முன்னுரை. இந்நூலில் மொத்தம் ஐந்து சிறுகதைகள்.
முதல் கதை -தின்பண்டம் 1934
மிக நெகிழ்ச்சியான கண்களில் கண்ணீர் வரக்கூடிய அற்புதமான சிறுகதை ...சுதந்திரத்திற்கு முன்பு பசிக்கொடுமை -வடை மீது ஆசை. பாத்திரங்களை அடகு வைத்து வடை சுட்ட பிறகு அதை ஆசையாய் சாப்பிட முடியாமல் பகிர்ந்தளிப்பது யதார்த்தம்.
இரண்டாவது சிறுகதை - அப்பாவுக்கு என்ன வேலை?
பலர் அப்பாவை பற்றி குறிப்பிடும் போது ஓட்டலுக்கு சென்று பார்க்கும் போது அவனை அறியாமலேயே அவன் அப்பாவின் வேலை தெரிந்து விடும் போது கண்களில் ஒருவித தடுமாற்றம் மிகச்சிறப்பு.
மூன்றாவது சிறுகதை - வில்லா ஒரு கனவுலக வீடு
அடிக்கடி தன் கனவுகளில் வரும் ஒரு பழைய வீடு. உழைத்து சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு வீடு வாங்க வரும்போது பல வீடுகளை பார்த்து முடிவு செய்த பிறகு கடைசியாக ஒரு வீடு. அதில் ஒரு சில வரிகள்...ஒரு நன்றிக்கடன்.. நான் உன் அப்பன் ஏழ்மையை வச்சி இத அடிமாட்டு விலைக்கு வாங்கினேன். ஒரு பிராயசித்தம் ..இந்த வீட்டை உனக்கே வித்தா.. மனதை உருக்கும் நேர்மையான மனிதர்களின் கதை இது.
நான்காவது சிறுகதை - புல்வெளி ஒதிக்கீடு
இது அமைதி விரும்பும் பூனை இந்த பூனையும் எலி சாப்பிடுமா ...யார் எப்போது வந்தனர் ...எங்கிருந்து வந்தனர் என்பதெல்லாம் மிருகங்கள் ஆகிய நமது பிரச்சினை அல்ல அது மனிதாபிமானம். இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் செய்யப்படும். முயல்- ஆடு- சிங்கம் -புலி -நரி என இட ஒதுக்கீட்டை பற்றி பேசுவது இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நுண்ணியமான சிறுகதை.
ஐந்தாவது சிறுகதை - மாற்றான்
குளித்த பிறகு துவட்டிக்கலையா.. இல்ல பாவத்தை கழுவி ஆச்சு.. என்ன பாவம்.. பதில் வரவில்லை .உங்களுக்கு வர வாரச் சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதல.. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் மருந்து செலவுக்கு வராது.. ஆஸ்பத்திரிக்கு போனா நீங்க வேலைக்கு போக மாட்டீங்க... அப்போ வார கூலியும் இல்ல.. அதனால நீங்க இந்த சங்கம் பதிவு பண்ணி கோரிக்கை வைத்து வெற்றி அடையணும். கைவலிக்குது தோழர்.
பல சிறுகதைகள் எழுதி தொகுப்பு என்று வெளியிடுவதை விட ஐந்து சிறுகதைகளில் மிக அற்புதமாக எழுதி அதை தொகுப்பாக வெளியிட்டு இன்றும் என்றும் வாழ்வை பதிவு செய்து செய்யும் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு சிறுகதையும் சுதந்திரப் போராட்டத்தில் வறுமை.. மக்களின் அன்றாட வறுமைகள்.. இட ஒதுக்கீடு... நம் உரிமைகள் என பலவிதங்களில் ஐந்து சிறுகதைகளில் சொல்லி இருப்பது மிக அருமை-இந்நூல் வெளிவர மிகவும் பெரிதாய் உதவியாய் இருந்த 108 ஆம்புலன்ஸ் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற சிறப்பான சிறுகதைகளை எழுத ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...
நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு
வாரம்தோறும் நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002
9360005566
No comments
Thank you for your comments