Breaking News

பொதுப்பணித் துறையினர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை...

காஞ்சிபுரம்:

திருப்புலிவனம் ஏரி முழுமையாக நிரம்பியும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையால் விவசாயிகள் பரிதாப நிலையில் உள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போகும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் திருப்புலிவனம் ஏரி முழுமையாக நிரம்பியும்,  பாசன கால்வாய்கள் துார்வாரப்படாததால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளளது. 

அதிகாரிகளின் அலட்சியத்தால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போகும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருப்புலிவனம் ஏரி சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

ஆனால், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், ஏரி நீரை நம்பியுள்ள திருப்புலிவனம், மருதம், மருத்துவான்பாடி, ஆனைப்பள்ளம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்போகும் நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, திருப்புலிவனம் ஏரிநீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:

திருப்புலிவனம் ஏரியில் இருந்து நீர் வரத்து கால்வாய்களின் மூலம் மருத்துவான்பாடி ஆனைப்பள்ளம்,, உள்ளிட்ட விவசாய நிலங்களில் வழியே நாகமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் புதர்கள் மண்டி கால்வாய்கள் முற்றிலும் தூர்ந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் தேவைக்கு அதிகமான நீர் கிடைத்தும் இப்பகுதி மக்கள் விளைநிலங்களை பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினருக்கு  பலமுறை புகார் அளித்தும், செவிடன் காதில் ஊதிய சங்குபோல, எவ்வித  நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் நீர்வரத்து கால்வாயை முறையாக ஆய்வு மேற்கொண்டு துரிதகதியில் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments