உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கோவை:
உழவர்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்து, பல விவசாய போராட்டங்களை முன்னின்று நடத்திய, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அய்யா அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை வையம்பாளையத்தில் அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவசிலைக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.
No comments
Thank you for your comments