பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தவறவிட்ட 65 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
தருமபுரி
பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தவறவிட்ட 65 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஒப்படைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று, அதன் விவரங்களை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு மூலமாக மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவு மூலமாக கடந்த 1.5.2021 முதல் தொலைந்துபோன 65 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் வழங்கினார்.
உடன் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, குணசேகரன், புஸ்பராஜா மற்றும் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் அன்பழகன். உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments