Breaking News

குமரி மாவட்டத்தில் தொடரும் கன மழை உட்பட தொகுப்பு செய்திகள்...

 


குமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் மழை காரணமாக 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிபாறை அணையில் இருந்து 3000 கன அடி உபரி நீர் திறப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான சிதறால் , திக்குறிச்சி.குழித்துறை, மங்காடு , வைக்கலூர் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுபணிதுறை சார்பில் எச்சரிக்கை.

கன்னியாகுமரியில் 

சுற்றுலா படகு இயக்கம் ரத்து



தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது கன்னியாகுமரி  மாவட்டத்திலும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா படகு இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது - இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு மீண்டும் சுற்றுலா படகுகள் இயக்கப்படும் என  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.




No comments

Thank you for your comments