Breaking News

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்

வேலூர்: 

புது தில்லியில் (11- 11- 2021) அன்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் மாநாட்டின் முடிவுகளின்படி, கீழ்காணும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.   அதன்படி வேலூர்  தலைமை தபால் நிலையம் முன்பு  இன்று (26-11-2021) காலை 10 மணி அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் AITUC CITU INTUC AICCTU LLF MLF AIUTUC NDLF சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

1. தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு!

2. மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச்சட்டத்தையும் திரும்பப் பெறு!

3. தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்தப் பெயராலும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்காதே!

4. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கு!

5.மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து! நகரங்களுக்கும் விரிவுபடுத்து!  

6. கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கு! ஏற்கனவே இயங்குகிற, மாநில நல வாரியங்களை சீர்குலைக்காதே! 

7. அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதிசெய்! 

8. கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த முன் களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்கு! 

9. விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் அதிஅவசிய மக்கள் பயன்பாட்டுத் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்து! செல்வவளம் மிக்கவர்களிடமிருந்து சொத்துவரி வசூலித்து இதற்கான நிதியைத் திரட்டி, தேசிய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி புனர்நிர்மாணம் செய்!

10. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்து!

11.ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய். அதுவரை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு.

12.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வா.

No comments

Thank you for your comments