ரசாயன கழிவுகளால் விஷமாகும் விளைநிலங்கள்...!
ஆம்பூர், நவ.11-
வாணியம்பாடி அருகே ரசாயன கழிவுகளால் விஷமாகின்றன விளைநிலங்கள்... மாசு அடைகின்றன நிலத்தடி நீர்... என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கொய்யான் கொல்லை பகுதியில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை, கொள்ளு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதன் அருகாமையில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தில் இரசாயன கழிவுகள் மற்றும் ஊதுவத்தி தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் இரசாயன துகள்கள் என அனைத்தையும் மூட்டைகளில் கட்டி லாரியில் கொண்டு வந்து அந்தப் பகுதிகளில் கொட்டி விட்டு செல்கின்றனர் மர்ம நபர்கள்.
இதனால் தற்போது பெய்து வரும் பருவ மழையினால் கழிவுகளிலிருந்து ரசாயனம் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் ஊறுகின்றன... இதனால் மண்ணில் ஊறி அருகில் உள்ள நீர் நிலைகள் மாசு ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி நிலத்தடி நீரும் மாசு அடைகின்றன...
நிலத்தடி நீர் மற்றும் மண் வளங்கள் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அலட்சியத்தால் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் இதுபோன்ற திறந்த வெளிகளில் கொட்டப்படுவதால் விவசாயிகள் பாசன வசதி பெறும் நீரின் தன்மை மாறுவதுடன் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் குடிநீர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
🔥Also Read : குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022: மேஷ ராசி நட்சத்திரப் பொதுப்பலன்கள்
No comments
Thank you for your comments