நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்... நேருக்கு நேர் மோதி சுக்குநூறாகிய லாரி
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே இரண்டு லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் சுக்குநூறாகிய லாரி விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலியில் இருந்து பெண்ணாடம் சிமெண்ட் பேக்டரி கண்டெய்னர் லாரி மூலம் சாம்பல் ஏற்றுக்கொண்டு விருத்தாசலம் கோ.பொன்னேரி பைபாஸ் ரவுண்டானா வரும்போது விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கன்டெய்னர் லாரி சுக்குநூறாகி சாலைகளில் தெறித்து ஓடியது.
இதில் சிதம்பரம் நோக்கி சென்ற லாரி சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தை உடைத்து தடுப்பு கட்டை மோதி மேலே ஏறி நின்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து பின்னர் லாரி ஓட்டுநர்களை பத்திரமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
No comments
Thank you for your comments