அம்பேத்கார் சிலை அமைக்க கோரிக்கை நினைவு மனு
ஈரோடு:
ஈரோட்டில் 36 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, அம்பேத்கார் சிலை அமைக்க கோரிக்கை நினைவு மனுவை அளித்தனர்..
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய புரட்சியாளர் அம்பேத்கர். அவருடைய முழு உருவச்சிலையை ஈரோட்டில் அமைக்க வலியுறுத்தி அம்பேத்கார் பெரியார் இயக்கங்கள், தலித் அமைப்புகள், அரசியல் கட்சிகள், ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மற்றும் 36 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடமும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னி அவர்களிடமும் கோரிக்கை நினைவு மனுவை கொடுத்தனர்.
No comments
Thank you for your comments